தமிழக முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் "ஜெ"அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார்.
எனவேதான், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
இதனைச் செயல்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்தியூத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை, தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் 1,000 ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
உலக மகா பொய்யர்கள் யார் யார்?
போரில் ஜனங்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்னவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாற்று
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்வு
87 இலங்கைத் தமிழர்களை கைது செய்தது இந்தோனேசிய கடற்படை
ஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோள்
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார்.
எனவேதான், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
இதனைச் செயல்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்தியூத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை, தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் 1,000 ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
உலக மகா பொய்யர்கள் யார் யார்?
போரில் ஜனங்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்னவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாற்று
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்வு
87 இலங்கைத் தமிழர்களை கைது செய்தது இந்தோனேசிய கடற்படை
ஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோள்
No comments:
Post a Comment