Tuesday, 2 August 2011

மருத்துவ நுழைவு தேர்வு: ஜெ., கண்டனம்


சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் ஏற்கனவே நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட முடியாது.
நுழைவுத்தேர்வால் இட ஒதுக்கீடு பின்பற்றுவது கடினமாகும் என கூறியுள்ளார்.

Enhanced by Zemanta

கல்மாடி விவகாரம் குறித்து: பார்லி.,யில் அறிக்கை தாக்கல்

புதுடில்லி: காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சுரேஷ் கல்மாடி நியமனம் செய்யப்பட்டது குறித்து மத்திய தணிக்கைத்துறை பிரதமர் அலுவலகத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான் பிரதமர் மன்மோகன் சிங்குடன் காலை அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மக்கான் தானாக முன்வந்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.
Enhanced by Zemanta

ஜெ ‌அ‌றி‌வி‌ப்பு: இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு மாத‌‌ந்தோறு‌ம் ரூ.1,000

த‌மிழக முகா‌ம்க‌ளி‌ல் உ‌ள்ள இல‌‌ங்கை‌த் தம‌ி‌ழ‌ர்களு‌க்கு மாத‌ம் 1,000 ரூபா‌ய் ‌‌ஓ‌ய்வூ‌திய‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் "ஜெ"அரசு அறிவித்துள்ளது.


இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், த‌மிழக‌த்‌தி‌ற்கு அ‌க‌திகளாக வ‌ந்து, இ‌ங்கு‌ள்ள முகா‌ம்க‌ளி‌ல் த‌ங்‌கியு‌ள்ள த‌மிழ‌ர்க‌ளி‌ன் நல‌‌னி‌ல் முதலமை‌ச்‌ச‌ர் ஜெயல‌லிதா ‌மிகு‌ந்த அ‌‌க்கறை‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

எனவேதா‌ன், த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம் அனை‌த்து நல‌த்‌ ‌தி‌ட்ட‌ங்களு‌ம் முகா‌ம்க‌ளி‌ல் ‌த‌ங்‌கியு‌ள்ள இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு‌ம் ‌நீ‌ட்டி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ஆளுந‌ர் உரை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இதனை‌ச் செய‌ல்படு‌த்து‌ம் வகை‌யி‌ல், சமூக நல‌த்துறையா‌ல் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம் மு‌தியோ‌ர் ஓ‌ய்வூ‌திய‌த் ‌தி‌ட்ட‌ம், ஆதரவ‌ற்ற ‌விதவைய‌ர் ஓ‌ய்‌தியூ‌த் ‌தி‌ட்‌ட‌ம், ஆதரவ‌ற்ற பெ‌ண்க‌ள் ஓ‌ய்வூ‌திய‌த் ‌தி‌ட்‌ட‌ம், மா‌ற்று‌த் ‌திறனா‌ளிக‌ள் ஓ‌ய்வூ‌திய‌த் ‌தி‌ட்ட‌ம் ‌ஆ‌கிய ‌தி‌ட்ட‌ங்களை, த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் முகா‌ம்க‌ளி‌ல் வ‌சி‌த்து வரு‌ம் இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு‌ம் ‌வி‌ரிவுபடு‌த்‌தி முதலமை‌‌ச்ச‌ர் ஜெயல‌லிதா உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌‌லிதா‌வி‌ன் உ‌த்தர‌‌‌வி‌ன் பே‌ரி‌ல் முகா‌ம்க‌ளி‌ல் வ‌சி‌க்கு‌ம் 5,544 இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் மாத‌‌ந்தோறு‌ம் 1,000 ஓ‌ய்வூ‌திய‌ம் பெறுவா‌ர்க‌ள் எ‌ன்று அர‌சி‌ன் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும் படிக்க
உலக மகா பொ‌ய்ய‌ர்க‌ள் யா‌ர் யா‌ர்?
போ‌ரில் ஜன‌ங்க‌ள் செத்து மடிவது சகஜம் என்று சொன்னவ‌ர் ஜெயலலிதா: கருணா‌நி‌தி கு‌ற்ற‌ச்சா‌ற்று
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்வு
87 இலங்கைத் தமிழர்களை கைது செய்தது இந்தோனேசிய கடற்படை
ஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோள்
Enhanced by Zemanta